Velichandhaan - தமிழ் பாடல் வரிகள்
திறந்திடுமா உறவெனும் தாழே
திறந்திடுமா திறந்திடுமா அன்பே அன்பே
ஆண் :
வெளிச்சந்தான் காணா போகாதே
இருட்டுல காலம் வாழாதே
அமைதியால் விடியுமே
வழியெல்லாம் தெரியுமே
ஓ நெஞ்சே எல்லாமே
வா மாறுமே தன்னாலே
நீ சும்மா தேம்பாதே
ஆண் :
வெளிச்சந்தான் காணா போகாதே
இருட்டுல காலம் வாழாதே
ஆண் :
யாரிடம் காயம் இல்லை
யாரிடம் சோகம் இல்லை
இன்பமே போகும் என்றால்
அது ஒரு வாழ்க்கை இல்லை
ஆண் :
பூவிலே வாசம் உண்டு
கூர்மையாய் முள்ளும் உண்டு
முட்களும் சேர்ந்தால் தானே
பூக்களும் வாழும் இங்கு
ஆண் :
காலம் மாறும் போதே
யாவும் மாறக் கூடும்
நாளும் மாறும் போதே
காலம் கூட மாறும்
ஆண் :
உலகமே கலக்கமே
அமைதியே விளக்கமே
ஓ நெஞ்சே எல்லாமே
வா மாறுமே தன்னாலே
நீ சும்மா தேம்பாதே
ஆண் :
வெளிச்சந்தான் காணா போகாதே
இருட்டுல காலம் வாழாதே
வெளிச்சந்தான் காணா போகாதே
இருட்டுல காலம் வாழாதே
பெண் :
ஓ…..ஆஹா
ஆண் :
மாபெரும் வானின் கீழே
யாவுமே பாதை தானே
பாதையில் போனால் போதும்
சேர்ந்திடும் ஞானம் தானே
ஆண் :
பார்வைகள் மாறும் போதே
ஆழமாய் காணும் போதே
காரணம் புரியும் கண்ணே
யாவுமே மாறும் மண்ணே
ஆண் :
ஊக்கமான காலம்
வானில் வந்து போகும்
ஊக்கம் தீரும் போதே
தூர காட்சி தோன்றும்
ஆண் :
பனியெல்லாம் விலகுமே
ஒளி நிலா ஒளிருமே
நெஞ்சே எல்லாமே
வா மாறுமே தன்னாலே
நீ சும்மா தேம்பாதே
ஆண் குழு :
வெளிச்சந்தான் காணா போகாதே
இருட்டுல காலம் வாழாதே
வெளிச்சந்தான் காணா போகாதே
இருட்டுல காலம் வாழாதே
Velichandhaan - English Lyrics
Lyrics by :
Karthik Netha